Monday 27 July 2015

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரணம்

ஊத்துக்காடு ஸ்ரீ வேங்கட சுப்பையர் அவர்கள், தேவி ஸ்ரீ காமாக்ஷியின்  பேரில் நவாவரணம் பாடினார். அதனால் தூண்டப்பட்ட ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், அவர் பிறந்த ஊரான திருவாரூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ கமலாம்பிகை மீது நவாவரணம் பாடினர்.

இவர்கள் இருவரின் நவாவரணங்களை கேட்டு அனுபவித்ததின் பயனாக எனக்கும்  நான் வளர்ந்த ஊரான திருச்சிராப்பள்ளியின் அருகாமையில் இருக்கும் திருவானைக்கா என்கிற ஜம்புகேஸ்வரத்தில் அமர்ந்து நல்லருள் பொழியும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் மீது நவாவரணம் பாட வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

அவள் அருளால் அவள் தாள் வணங்கி, அவளுக்கு எதிரே அமர்ந்து, அவள் முகத்தில் புன்முறுவல் மாறாது  கருணை பொழிய வைக்கும் ஸ்ரீ பிரசன்ன கணபதியின் அருளாசியுடன் இந்த கீர்த்தன தொகுப்பை அகிலாண்டேஸ்வரியின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ மாத்ரே நம:

No comments:

Post a Comment