Thursday 13 August 2015

எட்டாம் ஆவரணம்

ராகம்: கீரவாணி
தாளம்: ஆதி

பல்லவி
அகிலாண்டேஸ்வரி ஸுக ப்ரதாயினி
கதம்ப வன வாஸினி பாலயமாம் ஸ்ரீ

அனுபல்லவி
ஸர்வஸித்திப்ரதாயக சக்ர நிவாஸினி
அதி ரஹஸ்ய யோகினி ஸமூஹ ஸேவிதே

சரணம்
ஸ்ரீபுர த்ரிகோணக வாஸினி கௌலினி
த்ரிகுணாத்மிகே  பாலே பண்டாஸுர பஞ்சனி
வைடூர்ய மணி மாலா தாரிணி ஹம்ஸினி
கேது க்ரஹ ப்ரீத்யர்த்த காரணி பூரணி

அர்த்தம்:
கதம்ப வனத்தில் வசிப்பவளும், சுகத்தினை அளிப்பவளுமான அகிலாண்டேஸ்வரி, என்னை காக்கட்டும்.

ஸர்வ ஸித்தி ப்ரதாயக சக்ரத்தில் வசிப்பவளான அவளை, அதி ரஹஸ்ய யோகினிகள் வணங்குகிறார்கள்.

ஸ்ரீபுரத்தின் முக்கோணத்தில் வசிக்கும் கௌலினி, முக்குணங்களையும் தன்வசப்படுத்தியவள். அவளே, பாலா. பண்டாசுரனை வதைத்தவள். வைடூர்ய மணி மாலையினை அணிந்தவள். அன்னம் போன்றவள். கேது த்ருப்தி அடைய காரணமானவள். முழுமையானவள்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment