Tuesday 4 August 2015

நான்காம் ஆவரணம்

ராகம்: ஸ்ரீ
தாளம்: ஆதி

பல்லவி
அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ சிவசங்கரி
சதுர் தசார ஸௌபாக்யதாயினி

மத்யம கால சாஹித்யம்
ஸர்வஸௌபாக்யதாயக நிலயே
த்ரிபுரவாஸின்யாதி ஸேவிதே

அனுபல்லவி
சதுர்தச த்ரிகோனக சக்தி ஸ்திதே
ஸம்ப்ரதாய யோகினி விசேஷ பூஜிதே

சரணம்
சுந்தர முக்தால ஹார கரத்ருதே
சந்த்ர க்ரஹ அனுக்ரஹநுதே
மந்த்ர தந்தர யந்த்ர ஸ்வரூபிணி கமலே
மந்த்ரினி தண்டினி ஸன்னுத ஸகலே

அர்த்தம்:
சிவ சங்கரியான அகிலாண்டேஸ்வரி 14 முக்கோணங்கள் கொண்ட ஆவர்ணத்தில் அமர்ந்து சகல சௌபாக்யங்களையும் நமக்கு தருகிறாள். ஸர்வஸௌபாக்யதாயக சக்ரத்தில் இருக்கும் அவளை த்ரிபுரவாசினி முதலியோர் வணங்குகிறார்கள்.

ஒரோரு முக்கோனத்திலும் ஒரு சக்தி உள்ளாள். சம்ப்ரதாய யோகினிகள்  இந்த ஆவர்ணத்தில் உள்ளனர்.

அழகிய முத்து மாலையினை கையில் வைத்துள்ளாள். சந்திரனின் அருள் கிடைக்க வழி வகுக்கிறாள். அனைத்து மந்த்ர, தந்தர, யந்த்ர ஸ்வரூபமாக உள்ளாள். மந்த்ரினி (மாதங்கி) மற்றும் தண்டினி (வாராஹி) 
சஹிதமாக வீற்றிருக்கிறாள்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment